மணலியில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை மணலியில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, மணலி போலீசார் நேற்று அங்குள்ள மணலி பாடசாலை தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கண்காணித்தனர். 

அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா மற்றும் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை விற்பனை செய்த புளியந்தோப்பை குணசேகர் (வயது 38), சந்திரசேகர் (44) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். மேலும் அங்கு சோதனை நடத்தி 300 கிலோ எடை கொண்ட விமல், ரெமோ, எம்டிஎம், சைனி பான், ஸ்வாகத் பான் உட்பட குட்கா பான் மசாலா பாக்கெட்டுகளுடன் ரூ. 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Translate »
error: Content is protected !!