ரூ. 17 லட்சம் செலவில் மாடுலர் கிச்சன்: போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை, புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் கேண்டீனில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடுலர் கிட்சனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை நகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கேண்டீனை சில மாதங்களுக்கு முன்பு கமிஷனர் பார்வையிட்டார். உணவு தயாரிக்கும் உபகரணங்களை சுகாதாரமாக அமைக்க ஏற்பாடு செய்வதற்காக காவலர்களிடம் கமிஷனர் கலந்தாலோசித்தார். அப்போது காவலர்கள் மாடுலர் கிச்சன் அமைக்க வேண்டுகோள் விடுத்தனர். காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ. 17 லட்சத்து 32 ஆயிரத்து 296- செலவில் புதிதாக மாடுலர் கிச்சன் அங்கு அமைக்கப்பட்டது. இந்த கிச்சன் சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் நேரடி கண்காணிப்பில், இணைக்கமிஷனர் மல்லிகா மற்றும் துணைக் கமிஷனர்கள் மேற்பார்வையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று புனித தோமையார்மலையில் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாடுலர் கிச்சன் காவலர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். பின்பு ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர்போலீஸ் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!