வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை – சுதாகர்

சென்னை,

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!