விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: மன்னிப்பு கோரினார் இலங்கை வாலிபர்

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக, பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர், தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக் கொண்டு, ‘800’ என்ற திரைப்படத்தில், அந்த பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், தமிழகத்தில் இதற்கு பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் முத்தையா முரளிதரனின் விளக்கம் மற்றும் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக் கொண்டார்.

இதற்கிடையே, விஜய் சேதுபதியின் மகளுக்கு ரித்திக் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பாலியல் ரீதியில் மிக மோசமான மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் விஜய் சேதுபதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த வாலிபர் இலங்கையை சேர்ந்தவர் என்பத கண்டறிந்தனர். அவரை கைது செய்ய, சைபர் கிரைம் காவல்துறையினர் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கையை சேர்ந்த இளைஞர் மன்னிப்பு கேட்ட வீடியோ இலங்கை ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த வாலிபர் தனது வீடியோவில், கொரோனா பாதிப்பால் தமக்கு வேலை போய்விட்டதாகவும், மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவிற்காக விஜய் சேதுபதி, அவரது மனைவி, மகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனது குடும்ப சூழல் கருதி மன்னிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், அந்த வாலிபரின் தாயாரும், தங்களை மன்னிக்கும்படி விஜய்சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!