விபசாரம் நடத்திய பெண் உள்பட இருவர் கைது: 4 அழகிகள் மீட்பு

சென்னை சாலிகிராமத்தில் வீட்டுக்குள் விபசாரம் நடத்திய பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து 4 அழகிகளை மீட்டனர்.

சென்னை, சாலிகிராமம் பகுதியில் விபசாரம் நடப்பதாக தி.நகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது மேற்பார்வையில் தனிப்படை எஸ்ஐ பாலகிருஷ்ணன் மற்றும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சாலிகிராமம், தேவராஜ் நகரில் வீட்டுக்குள் விபசாரம் நடப்பது தெரியவந்தது. அதனையடுத்து அங்கு அதிரடி ரெய்டு நடத்திய போலீசார் விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த வடபழனியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 49), வசீரா பானு (53) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அங்கு விபசாரத் தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த 4 அழகிகள் மீட்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து விபசாரத் தொழிலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 4 செல்போன்கள், ரொக்கம் ரூ. 21 ஆயிரத்து ஐநுாறு பறிமுதல் செய்யப்பட்டது. கைதான புரோக்கர்கள் இருவரும் விசாரணைக்குப்பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!