விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 176 கிராம் தங்கம் பறிமுதல் – மூன்று பேரிடம் விசாரணை

விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 176 கிராம் தங்கம் பறிமுதல் செய்ய பட்டு மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது .

 சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூ7.65 லட்சம் மதிப்புள்ள 152 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த  நாகை மாவட்டம் பழையாறையை  சேர்ந்த முகமது சாதிக் என்பவர்  ரூ56.61 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 128 கிராம் எடைகொண்ட தங்கமும், தஞ்சையைச் சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் மறைத்து எடுத்து வந்த  ரூ44.97 லட்சம் மதிப்புள்ள  896 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல்.

 இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுரேஷ்முகமது சாதிக் மற்றும் முகமது ஜியாவுதீன் சாகிப்  ஆகிய மூன்று பேரிடம் விசாரணை. கடத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2 கிலோ 176 கிராம். இதன் மொத்த மதிப்பு 1கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 853 ரூபாயாகும்.

Translate »
error: Content is protected !!