ஸ்டெர்லைட் ஆலை… ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது – கே.பாலகிருஷ்ணன் பேச்சு

ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த நடவடிக்கையும் நடக்க கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு..

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யலாம். ஆக்ஸிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

மக்களின் ஒத்துழைப்புடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் கலந்து பேசி சுமூகமான அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!