அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்து விட்டதாகவும், ஆபாசப்படத்தை இன்டெர்நெட்டில் போடுவதாக கூறி மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு புகார் அளித்தார்.

இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும், அவருக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இவ்வாறு, அவரைப் பிடிக்க இரண்டு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்து எதுவும் இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை.

 

 

 

Translate »
error: Content is protected !!