அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி – கமிஷனர் சங்கர் ஜிவால்

கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால், இன்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார்.

சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி. கொரோனா தடுப்பில், போலீசின் முழு அமைப்பும் பயன்படுத்தப்படும். முழு ஊரடங்கை வெற்றிகரமாக அமல்படுத்த போலீசார் முன் வர வேண்டும். ஊரடங்கு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!