அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் – செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தமிழக முதலமைச்சர் தலைவர் அவர்களின் ஆணைக் கிணங்க திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயத்தில் திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித் தொகை ரூ.4000/-ம்,10கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் .கணேசமூர்த்தி ,திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.எஸ்.வினீத், வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன், அதிகாரிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!