ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் – அதிபர் ஜோ பைடன்

அண்மையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தலிபான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது  என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என்று அதிபா் பைடன் கூறியுள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் கூறியது,

ஆப்கனில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் அங்கு செல்லவில்லை. நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கான் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்க அமெரிக்கா விரும்பவில்லை. தலிபான்களை நம்பவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு அரசைக் காக்கும் திறன் உள்ளது என்பது நம்பிக்கை. எனவே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை ஆகஸ்ட் 31 க்குள் முழுமையான முடிவுக்கு வரும்என்றார்.

 

Translate »
error: Content is protected !!