ஆப்கானிஸ்தானில் பூகம்பம்… ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானின் வடக்கு சரிகார் பகுதியை இன்று ஒரு வலுவான பூகம்பம் உலுக்கியுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உயிரிழப்புகள் அல்லது பிற விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் முதலில் 18.6 கி.மீ. ஆழத்தை மையமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தலீபான் பயங்கரவாதிகளின் தாக்குதலால் போரால் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கமும் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!