ஆவடி அருகே வெள்ளானூரில் ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு ; ரூ.35 ஆயிரம் மாயம்

ஆவடி,

ஆவடி அடுத்த வெள்ளானூர் அலமாதி சாலை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ராஜபாண்டியன்(34). இவர், வீட்டருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டாமல் வீட்டிற்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது,

கல்லாபெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அலெக்ஸ் ராஜபாண்டியன் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!