இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்து அரசு ஊரடங்கு உத்தரவை இன்னும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது அங்கு செலுத்தப்பட்டு தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருப்பதாகவும், கொரோனா பரவல் விரைவில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!