இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3876 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,876  பேர் உயிரிழந்துள்ளனர்..!

புதிதாக  3,29,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,56,082 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,53,818 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,15,221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் இதுவரை  17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!