இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 584 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,32,162 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 44,807 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,28,410 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,43,794 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 12 கோடியே 95 லட்சத்து 91 ஆயிரத்து 786 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,83,397  லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Translate »
error: Content is protected !!