இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் ரத்து

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வரவிருந்த பயணத்தை ரத்து செய்தார்.

டெல்லியில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இந்தியா வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தற்போது அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும் வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது.

எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மீண்டும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை பிரதமர் போரிஸ் ஜான்சன் அமல்படுத்தினார். இந்த நிலையில் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்து உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!