உத்தமபாளையம் அருகே தடையை மீறி சேவல் சண்டை நடத்தியதில் இருகோஷ்டிகள் இடையே மோதல்

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயப்பன்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். அதில் சிலரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் நேற்று காலையில் இருந்து மாலை வரை அந்த பகுதியில் 2 கோஷ்டிகளாக தடையை மீறி சேவல் சண்டை நடத்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Translate »
error: Content is protected !!