உலக சுற்றுச்சூழல் தினம்.. தேனியில் மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசுமை தோழர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கண்டு நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு முத்துக்குமார்காவல்துறை ஆய்வாளர்கள்  மற்றும் பசுமை தோழர்கள் இணைந்து கோவில் வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சுற்று சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டதுமற்றும்  கோவில் வளாகத்தை சுற்றி இருந்த நெகிழிகளை காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து திரு முத்துக்குமாரசாமி துப்புரவு பணியாளர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கினார். இதில் பெரியகுளம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் சுகாதார ஆய்வாளர் அசன் முகமது மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் தன்னார்வலர்கள் பசுமை தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!