கள்ளக்காதல் விபரீதம்: சகோதரியை காலால் மிதித்து கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்

சென்னை எண்ணூரில் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் சகோதரியை காலால் மிதித்து கொலை செய்த வாலிபர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 28). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் முகிலன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2010 ஆம் ஆண்டு வெல்டிங் வேலை செய்யும் விஜயகுமார் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவாஷினி என்ற 9 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் சுப்புலட்சுமி எர்ணாவூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள தனது தாய், அம்முலு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இரவு தாய் அம்முலு வெளியே சென்று விட்டார். இரவு 11 மணியளவில் சுப்புலட்சுமி தனது கள்ளக்காதலனான மீஞ்சூரைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இரவு 11.45 மணியளவில் வெளியே சென்றிருந்த சுப்புலட்சுமியின் தாய் அம்முலு, தனது தங்கை மகன் பிரதாப்புடன் அங்கு வந்தார். வீட்டுக்குள் சுப்புலட்சுமி மற்றும் ஜானகிராமன் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். கள்ளக்காதலில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பிரதாப் சுப்புலட்சுமியை கையாலும், காலாலும் தாக்கியுள்ளார். மேலும் சுப்புலட்சுமியின் கழுத்தில் கால் வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி சுப்பு லட்சுமி உயிரிழந்தார். அதனையடுத்து பிரதாப் போலீசுக்கு தகவல் தெரிவித்து எண்ணுார் போலீசில் சரணடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக எண்ணுார் போலீசார் 302 (கொலை) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!