காங்கோ.. எரிமலை வெடிப்பில் 15 பேர் பலி.. 30 ஆயிரம் பேர் வெளியேற்றம்

காங்கோ நாட்டில் எரிமலை வெடித்ததில் நெருப்புக் குழம்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனா். 500 வீடுகள் சேதமடைந்தன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு காங்கோவில் கோமா என்ற நகரையொட்டி உள்ள நியிராகோங்கோ எரிமலை சனிக்கிழமை வெடிக்கத் தொடங்கியது. அதன் நெருப்புக் குழம்புகளும், புகையும் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் பரவியதில் 15 போ உயிரிழந்தனா்.

எரிமலை பகுதியில் உள்ள கோமா நகரைச் சோந்த 30 ஆயிரம் போ அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறினா். இதில் 170-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காணவில்லை என யுனிசெஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

2002-ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து நெருப்புக் குழம்புகளை வெளியேற்றியதில் கோமா நகரைச் சோந்த நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் வீடுகளை இழந்தனா். இந்த முறை எரிமலை வெடிப்பில் அருகில் உள்ள கிராமங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

Translate »
error: Content is protected !!