காவல் அதிகாரிகளுடன் புத்தாண்டு கொண்டாடிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

காவல் அதிகாரிகள், ஆளிநர்களுடன் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று  இரவு புத்தாண்டு கொண்டாடினார்.

சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 3 கூடுதல் கமிஷனர்கள், 4 இணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் புத்தாண்டையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை டிசம்பர் 31ம் தேதி இரவு பார்வையிட்டார். சென்னை பெசன்ட் நகர் பீச், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணா ஆர்ச், ராஜரத்தினம் மைதானம், புனிததோமையர் மலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட கமிஷனர் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர கூடுதல் கமிஷனர்கள் தினகரன், கண்ணன், இணைக்கமிஷனர்கள் சுதாகர், மகேஷ்வரி, பாண்டியன், லட்சுமி மற்றும் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!