கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு

ஒசூர்,

குறைந்த, மத்திய, உயர் வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவினருக்கு குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மொத்த கொள்முதல் விலை திட்டப்பகுதிகளில் உள்ள குறைந்த, மத்திய, உயர் வருவாய் பிரிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவு குடியிருப்பு மனைகள் ஆகிய இனங்களுக்கு 5 ந் தேதி அன்று காலை 11 மணியளவில் ஓசூரில் அமைந்துள்ள தாசப்பா கல்யாண மண்டபத்தில் குலுக்கல் நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தில் ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தவறாது குலுக்கலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!