கொட்டும் மழையிலும் கொரோனா மூலமாக மரணித்தவரை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

நேற்று இரவு வேலூர் மாவட்ட பேரணாம்பட்டைசேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார்.

உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சர்பராஸ் மற்றும் நிர்வாகிகளான அர்ஷத், முபாரக் அலி, முபாரக், அப்ரார்(ISF), ஷேபாஸ், பேட்டு உவேஸ் ஆகியோர் கொட்டும் மழையிலும் நல்லடக்கம் செய்தனர்.

தொடர்ந்து மாற்று மத சகோதரர்கள் சகோதரிகள் உடலை அடக்கம் செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!