கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது – பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என  பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் கொரோனா  நோய்த்தொற்றுக்கான புதிய பாதிப்புகளின்  எண்ணிக்கை இப்போது குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அடுத்த ஆண்டில் தொடங்க நாம் தயாராகி வருகிறோம்.

இந்தியாவில் தடுப்பூசிகள் தொடர்பாக தேவையான இறுதிகட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்றடைய பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டு பல்வேறு விஷயங்களை நமக்கு  நன்றாகக் கற்றுக் கொடுத்தது. இது சவால்கள் நிறைந்த ஆண்டாகும்.

இந்தியாவின் முன்னணி  கொரோனா போர்வீரர்களை நினைவில் கொள்வதற்கு ஆண்டின் கடைசி நாள் இதுவாகும். நம் நாட்டில், வதந்திகள் விரைவாக பரவுகின்றன. வெவ்வேறு நபர்கள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக அல்லது பொறுப்பற்ற நடத்தை காரணமாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தடுப்பூசி போடத்தொடங்கும் போது வதந்திகள் பரவக்கூடும், சில ஏற்கனவே தொடங்கிவிட்டன எனக் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!