கொரோனா தொற்றால் உயிரிழந்த அமைச்சுப்பணியாளரின் திருவுருவப்படத்துக்கு கமிஷனர் மலரஞ்சலி

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

 

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பதிவரை உதவியாளராக (Record Assistant) பணிபுரிந்து வந்த சாமிநாதன் (வயது 58). இவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூச்சுத் திணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதியன்று உயிரிழந்தார். சாமிநாதனுக்கு காயத்ரி என்ற மனைவியும், திவ்யரக்‌ஷா, காவ்யரக்‌ஷா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். சாமிநாதனின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டு சாமிநாதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சென்னை நகர கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், துணை ஆணையாளர் (நிர்வாகம்) பெரோஸ்கான் அப்துல்லா, காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!