கொரோனா பரவலை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் பாராட்டு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 17 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் போலியா தடுப்பூசி போடும் பணி நடைபெறும். போலியோவை விரட்டியது போல கொரோனாவையும் விரட்டுவோம்என்றார்

 

Translate »
error: Content is protected !!