கோட்டூர்புரத்தில் 250 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, கோட்டூர்புரத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்திவரப்பட்ட 250 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

சென்னை கோட்டூர்புரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தரமணி, களிக்குன்றம் பகுதியில் ரோந்து சென்ற போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அதில் இருந்த நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து குட்கா பாக்கெட்டுக்களை கடத்தி வந்த சென்னை, அடையாறு பெசன்ட் நகரைச் சேர்ந்த புருஷோத்தமன் (வயது 25), உள்ளகரத்தைச் சேர்ந்த மாரிசங்க (27) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் மேற்படி சரக்கு வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

Translate »
error: Content is protected !!