சிங்கப்பூரில் 13 வயது மாணவன் வெட்டிக் கொலை: சக மாணவன் வெறிச்செயல்

சிங்கப்பூரில் பள்ளி மாணவனை சக மாணவன் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ரிவர் வேலி உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூட கழிவறையில் மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த ரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அந்த சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!