சினிமாத்துறையில் கால் பதித்த தோனி… அறிவிப்பை வெளியிட்டார் மனைவி சாக்‌ஷி!

கிரிக்கெட்டில் முத்திரை பதித்த மகேந்திரசிங் தோனி, அடுத்து திரைத்துறையில் கால் தடம் பதிக்கவுள்ளார். பொழுதுபோக்கு தொடரை எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்படும் என்று, அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும், இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாகவும் வலம் வந்தவர், ஜார்க்கண்டை சேர்ந்த தோனி. உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்த தோனி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

எனினும், ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று தோனி வழி நடத்தினார். ஆனால், இம்முறை ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. எனவே, தோனி இனி ஐ.பி.எல். தொடரிலும் விளையாட மாட்டார் என்ற பேச்சு எழுந்தது.

தோனியை இனி திரையில் பார்க்க முடியாதே என அவரது ரசிகர்களிடம் சோகத்தில் இருந்த நிலையில், அவரது மனைவி சாக்‌ஷி வெளியிட்டுள்ள அறிவிப்பு, தோனி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.

சினிமாத்துறையில் முதன்முதலில் களமிறங்கிய தோனி, கடந்த வருடம் ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனத்தின் சார்பாக “ரோர் ஆஃப் தி லயன்” என்ற ஆவண படத்தொடரை அவர் தயாரித்தார்.

தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ஒரு வெப் சீரியஸ் தயாரிக்கப் போவதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் சாக்‌ஷி தோனி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த நிறுவனம் சார்பில், அறிமுக எழுத்தாளரின் அறிவியல் புனைகதை புத்தகத்தை வெப் சீரிஸாக எடுக்கப்படவுள்ளது. இக்கதை ஒரு மர்மமான அகோரியின் பயணத்தை ஆராய்வதாக உள்ளது.

இந்த கதை, அதன் களம் ஆகியன, உலகத்தில் உள்ள அனைத்து பக்கங்களில் இமிருந்து கச்சிதமாகத் திரைக்குக் கொண்டு வர விரும்புகிறோம். இதை திரைப்படமாக எடுப்பதைவிட வெப் சீரிஸாக எடுப்பதுதான் சிறப்பாக இருக்கும். சயின்ஸ் பிக்ஷன் படமான இது, அமேசான் அல்லது நெட்ப்ளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக, சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!