சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்று முந்தைய நாள், 48 பேர் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக சீன சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை. 20 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய கொரோனா பாதிப்பால்  சீனாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,497 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

.

Translate »
error: Content is protected !!