சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா..!

சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் தொடங்கியது. சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. நேற்று 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தவிர 21 அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீன சுகாதாரத் துறை அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளாக அறிவிக்கவில்லை. தற்போது, ​​குவாங்டாங் மாகாணத்தில் தொற்றுநோய் பரவி வருகிறது. இந்த புதிய தொற்றுநோய்களால் சீனாவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,653 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், கொரோனாவால் இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்

Translate »
error: Content is protected !!