செங்கல்பட்டில் புழல் சிறை காவலர் வெட்டிக் கொலை தப்பியோடிய உறவினருக்கு வலை

சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே பைக்கில் சென்ற ஆயுதப்படை காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பாலுார், பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த அழகேசனின் மகன் இன்பரசு (29). சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் புழலை நோக்கி சென்று கொண்டிருந்தார். பழைய சீவரம் பகுதியை தாண்டிய போது போது இன்பரசுவை வழிமறித்த நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அந்த வழியாக வந்த நபர்கள் ரத்தவெள்ளத்தில் இன்பரசு கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலுார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காவலர் இன்பரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மேற்பார்வையில் பாலுார் போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

குடும்பப் பகை காரணமாக இன்பரசுவின் நெருங்கிய உறவினர் ராஜன் இந்த கொலையை தனது கூட்டாளிகளுடன் அரங்கேற்றியது தெரியவந்தது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!