சென்னை திருமுல்லைவாயலில் கார் திருடன் கைது

சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் கார்கள் திருடிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். 4 கார்கள் மற்றும் ஒரு புல்லட் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை, நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகர், வசந்தா தெருவைச் சேர்ந்தவர் பரந்தாமன் (29). கட்டட காண்டிராக்டர். பரந்தாமன் கடந்த 22ம் தேதி மாலை, திருமுல்லைவாயல், மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் வாசலில் அவரது காரை நிறுத்திவிட்டு கோயிலிக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது கார் திருடு போயிருந்தது. இது குறித்து பரந்தாமன் திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து காரை திருடிய சரண் (வயது 23) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் சரண் டிரைவராக வேலை செய்து வருவதும், திருமுல்லைவாயல் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனம் திருடியதும் தெரியவந்தது. சரணிடம் இருந்து பரந்தாமனின் கார் உட்பட 4 கார்கள் மற்றும் ஒரு புல்லட் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் சரண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!