சென்னை நகரில் குறைந்த சாலை விபத்துக்கள்: போக்குவரத்து போலீசார் பெருமிதம்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடந்த வருடமான 2020ல் போக்குவரத்து விதியினை மீறியவர்கள் மீது 28,70,296 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

2020ல் நடந்த 4368 சாலை விபத்துகள், அதற்கு முந்தைய ஆண்டான 2019யை காட்டிலும் 36% குறைவாகும். சாலை விபத்துகளில் உயிரிழந்த 846 நபர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 45% குறைவாகும். அதுபோல காயம் அடைந்த 2597 நபர்களின் எண்ணிக்கை 61% குறைவாகும். கடந்த ஆண்டில் போக்குவரத்து போலீஸாரின் திட்டங்களான சாலைதத்தெடுப்பு மற்றும் விதிமீறல் இல்லாத போக்குவரத்து சந்திப்பு பொது மக்களின் வரவேற்பை பெற்றது.

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவிட்-19 வைரஸின் தொற்று பரவலை தடுக்கும் வகையில் 31.12.2020ம் தேதி இரவு பொது இடங்களில் முக்கியமாக கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுருந்தது. அவ்வுத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகரம் முழுவதும் ஒருவார காலமாக இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் சாலைகளும், மேம்பாலங்களும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்லாமல் மூடப்பட்டd. 170 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

31.12.2020 அன்று இரவு வாகன தணிக்கை நடத்தப்பட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வும், அறிவுரையும் வழங்கப்பட்டது. குடித்துவிட்டு மற்றும், அதிவேகமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுதல் போன்ற தீவிர விதிமீறல்களில் ஈடுப்பட்டவர்கள் மீது 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புத்தாண்டு இரவில், சென்ற ஆண்டில் 7பேர் உயிரிழந்தனர். அதனை ஒப்பிடும் போது இந்த ஆண்டு காவல்துறை எடுத்த சீறிய நடவடிக்கையின் காரணமாகவும், தீவிர கண்காணிப்பினாலும் ஒரே ஒரு சாலை விபத்து உயிரிழப்பினை தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. அரசின் உத்தரவினை நிறைவேற்ற போக்குவரத்து காவல்துறை எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பினை நல்கிய. சென்னை பெருநகர மக்களுக்கு பெருநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Translate »
error: Content is protected !!