சென்னை மயிலாப்பூர் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் – முதல்வர் உத்தரவு

சென்னை,

மயிலாப்பூர் கிழக்கு பகுதி திமுக நிர்வாகியான ஆர்.பாலு ஒரு கட்டுமான நிறுவனத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை பற்றி அந்த கட்டுமான நிறுவனத்தில் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து முதல்வர் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை பற்றி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளிட்ட அறிக்கை,

சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி ஆர்.பாலு கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். என அவர் குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!