சென்னை மாம்பலத்தில் கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் இருவர் கைது

சென்னை, மாம்பலம் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, கொளத்தூர், ராஜன் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 47). சென்னை, தி.நகர், நாகேஷ்வரராவ் ரோட்டில் டிஎன்எஸ் பிளாஸாவின் அசோசியேட் செகரட்டரியாக உள்ளார். கடந்த ஜுலை மாதம் 19ம் தேதி இரவு அங்குள்ள பிளாஸாவில் உள்ள 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை போனது. அது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பார்த்திபன் (28), பொள்ளச்சி செல்லச்சாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிராம் தங்க நாணயம், 20 கிராம் வெள்ளி மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பார்த்திபன் மீது கொலை வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளதும் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!