சென்னை விமான நிலையத்தில் 2 நாளில் ரூ. 2.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் ரூ. 2.6 கோடி கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் 6 பயணிகளிடம் இருந்து ரூ. 2.6 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 47 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 24 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!