சொர்க்கவாசல் திறப்பை காண முக்கிய பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை-திருச்சி காவல் துறை ஆணையர் பேட்டி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்கியது. அதன் பகல்பத்து உற்சவம் நாளை துவங்க உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகுண்ட ஏகாதசி திருவிழா 15 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 25ம் தேதி அன்று நடைபெறுகிறது.அந்த நிகழ்விற்கு கொரோனா காரணமாக 24  ஆம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் சொர்க்கவாசல் அன்று காலை 8 மணி வரை பக்தர்களுக்குஅனுமதி கிடையாது. எந்தவித சிறப்பு அனுமதி அட்டைகளும் வழங்கப்படாது .

20 நாட்கள் திருவிழாவில் பக்தர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 600 பேர் வீதம் மட்டுமே அனுமதிக்குப்படுவார்கள்.சொர்க்கவாசல் அன்று மட்டும் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற உற்சவ நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அனுமதி வழங்ப்படும் மற்றும்  கோவிலில்  டோக்கன் வழங்கப்பட்டு டோக்கன் உள்ள பக்தர்களுக்கும் அனுமதிக்கப்படுவார்கள்.

20 நாட்களில் உபயதாரர்கள் கூட சிறப்பு அனுமதி கிடையாது .வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காக 450 காவல் துறையினர் சுழற்சி முறையிலும் சொர்க்கவாசல் திறப்பு அன்று 1200 காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சொர்க்கவாசல் திறப்பை காண முக்கிய பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.பொதுமக்கள் காவல் துறைக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன்,காவல் துறை துணை ஆணையர்கள் பவன்குமார்,வேதரத்தினம் மற்றும் கோவில் நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!