ஜெத்தாவில் உலக தன்னார்வலர்கள் தினம் – தமிழக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு விருது

ஜெத்தாவில் உலக தன்னார்வலர்கள் தினம்தமிழக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு விருது  சவுதி அரேபிய வாழ் தமிழர்களுக்கு தொடர்ந்து சிறந்த சேவையாற்றி வரும் தமிழர்களுக்கு ஜெத்தாவில் உள்ள இந்திய துணை தூதரகம் விருது வழங்கி கவுரவித்தத உலக தன்னார்வலர்கள் தினம்.

ஜெத்தாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்திய யாத்திரிகள் நல அமைப்பு(IPWF) சார்பாக 2020 டிசம்பர் 05 ஆம் தேதி தன்னார்வலர்களை கவுரவிக்கும் விதமாக விழா நடைபெற்றது.இவ்விழாவில் ஜெத்தா தமிழ்சங்கம் சார்பாக கடந்த 30 ஆன்டுகளுக்கு மேலாக சவுதி வாழ் தமிழர்களுக்கு சிறந்த சேவை செய்து வருபவரும் சவுதி வாழ் தமிழர்களால் அதிகம் அறியப்படும் சிராஜ்தீன் அவர்களுக்கும் தமிழர்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வரும் பொறியாளர் வி.கே.எம்.எம் காஜா மைதீன் அவர்களுக்கும் செயல் இந்திய துணை தூதர் சாபிர் அவர்கள் சிறந்த சமுக சேவைக்கான விருதினை வழங்கி கவுரவித்து பாரட்டுகளை தெரிவித்து கொண்டார். இவ்விழாவில் பல்வேறு சமுக அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் விருது வழங்கப்பட்டது. தன்னார்வ பணியில் சிறப்பான சேவை புரிந்து விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!