தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்கு சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்..!

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆவதற்காக தடை செய்யப்பட்ட வனப் பகுதியின் ஆபத்தான பகுதியில் சென்று வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பும் இளைஞர்கள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது.

அந்த பகுதியில் எலிவாழ் அருவி, வரட்டாறு அருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளது. தற்பொழுது கொரோனா பொதுமுடக்கம் தடையை மீறி தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கு மேல் உள்ள அபத்தான உயர் பலி ஏற்படுத்தும் வரட்டாறு அருவிக்கு சென்று இளைஞர்கள் பாறைகளில் சறுக்கி விளையாடி வீடியோ எடுத்து யூடியூப், ஃபேஸ் புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் போட்டு ட்ரெண்டிங் அதற்காக அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து வருகின்றனர்

வனப்பகுதிக்குள் அத்துமீறி  நுலைபவர்களை தடுக்க வேண்டிய வனத்துறையினர் தடுக்கப்படாமல் உள்ளதால் இதற்கு வனத்துறையினர் துணை போகின்றனரா அல்லது வனத்துறையினர் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா போது முடக்கத்தின் இதே போன்று அதிக அளவில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு செய்தி ஒளிபரப்பான நிலையில் வனத்துறையினர் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு யாரும் செல்லாது கண்கணித்து வந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று இரண்டாவது பொது முடக்க நேரத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் உயிர் பலி ஏற்படுத்தும் ஆபத்தான பகுதிக்குச் செல்லும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி உயிர் பலி ஏற்படுதற்கு முன்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!