தமிழகத்தில் இன்று 1624 பேருக்கு கொரோனா பாதிப்பு; 17 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 1,624 பேருக்கு கோவிட் எனப்படும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்று உறுதியான 1,624 பேரில், சென்னையில் மட்டும் 483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 958 பேர். பெண்கள் 666 பேர்.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,66,167 பேர்; பெண்கள் 3,05,419 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 33 பேர் ஆவர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,904 பேர்; மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,47,752 பேர் ஆகும்.

கொரோனா வைரஸ் தாக்கி, இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,622 ஆக உள்ளது. சென்னை நகரில் மட்டும் இதுவரை 3,822 பேர், கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!