தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு: ஆகஸ்ட் 9 முதல் நேரில் வர உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சற்று கொரோனா பரவல் குறைந்ததால் வருட இறுதியில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2வது அலை அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அணைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் வரும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வரவும் உத்தரவுவிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!