தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் எஏஎஸ்பிக்களாக நியமனம்

தமிழக காவல்துறை கேடருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆல்பர்ட் ஜான் வேலுார் சப் – டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், சமய்சிங் மீனா நெல்லை வள்ளியூர் சப் – டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஆதர்ஷ் பச்சேரா செங்கல்பட்டு சப் – டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நெய்வேலி  சப் – டிவிஷன் ஏஎஸ்பியாக புக்யா ஸ்நேகா ப்ரியாவும், ராமேஸ்வரம் சப் – டிவிஷனுக்கு தீபக் சிவாச். துாத்தக்குடி திருச்செந்துார் சப்டிவிஷனுக்கு ஹர்ஷ் சிங் மற்றும் திருவண்ணாமலை சப் – டிவிஷன் ஏஎஸ்பியாக கிரண் ஸ்ருதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 7 பேரும் சமீபத்தில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி முடிந்த பின்பு மாவட்டங்களில் ஏஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!