தமிழ் நாட்டிலேயே ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் & தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,

தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் ஆக்சிஜன்  உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளை தமிழ் நாட்டிலேயே தயாரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் மருந்து உற்பத்தி செய்ய வரும் நிறுவனங்களுக்கு டிட்கோ தேவையான உதவிகளை அளிக்கும். குறைந்தபட்சம் 50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து டிட்கோ செயல்படும். டிட்கோ உடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ள நிறுவனங்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!