தரமணியில் செல்போன் பறிப்பு குற்றவாளி கைது: 12 செல்போன்கள் மீட்பு

சென்னை தரமணியில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). கடந்த 2ம் தேதி இவர் பணி முடித்து திருவான்மியூர், ஸ்ரீனிவாசபுரம் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஜெனிபரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அது தொடர்பாக தரமணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா உதவியால் விசாரணையை துவங்கினர். உதவிக்கமிஷனர் ரவி, தலைமை காவலர் கோபால், முதல்நிலைக்காவலர்கள் கருணாகரன், ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் நடத்திய விசாரணையில் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் (வயது 19) என்பவரும் அவருடன் சிறுவர் ஒருவரும் சேர்ந்து திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கிண்டி பகுதியில் வழிப்பறி செய்யப்பட்ட 4 செல்போன்கள் உட்பட 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு கைது செய்யப்பட்ட வினோத் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!