“பப்ஜி மதன்” தர்மபுரியில் சிக்கினான்..!

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யூடியூப்பர்மதன்தர்மபுரியில் வைத்து தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி,

பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பல லட்சம் பறித்துள்ளார் இந்தபப்ஜி மதன்“.

இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு வருக்கும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பியும் பப்ஜி மதன் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் மதனை தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் மதன் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி போலீசாரிடம் இருந்து தப்பி கொண்டே இருந்தார். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தர்மபுரியில் பதுங்கி இருந்தபப்ஜி மதன்தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் போலீசாரை பார்த்ததும் கண்ணீர் விட்டுள்ளார். போலீசார் காலை பிடுத்து.. என்னை மன்னிச்சிடுங்க.. என்னை கைது செய்யாதிங்க என கெஞ்சி உள்ளார் மதன். போலீசுக்கு சவால் விடுத்த மதன், போலீசாரை பார்த்ததும் அடங்கி, கெஞ்சி இருக்கிறார். முதலில் போலீசாரை பார்த்ததும் மதன் தப்பி ஓட முயன்று இருக்கிறார். ஆனால் போலீசார் அவரின் வீட்டை சுற்றி வளைத்ததால் எங்கேயும் தப்ப முடியாத மதன் போலீசிடம் சிக்கிக்கொண்டார்.

இன்று மாலைக்குள் சென்னை அழைத்து வர போலீசார் திட்டமிடுவதாக தெரிகிறது. இதில் ஏற்கெனவே மதனின் டியூப் சேனலுக்கு நிர்வாகியாக (அட்மின்) இருந்த அவரது மனைவி கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Translate »
error: Content is protected !!