தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் விளக்கம்

திருவள்ளுர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பெரிய முதலமைச்சர் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

* அடுத்த இரண்டு மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும்.

* தற்போது அமலில் உள்ள ஊடங்கை நீடிப்பது குறித்து ஆலோசித்து முடிவுஎடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்

* தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

* கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கைகளும் தற்போது போதுமான அளவில் உள்ளன.

* நேற்று ஒரே நாளில் 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு நாளைய சராசரி 78ஆயிரமாக உயர்ந்துள்ளது.

* திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி வீணாவதும் குறைந்துள்ளது.

* திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாளொன்றுக்கு 1.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 3.14 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இருப்பு உள்ளன.

* தடுப்பூசிக்கு மத்திய அரசை மட்டும் சார்ந்திருக்காமல் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளோம்.

* செங்கல்பட்டில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

* பிரச்சனைகளை சரி செய்து செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

Translate »
error: Content is protected !!