திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு கிடைத்த ரகசிய எஸ்பி தனிப்படை,
எஸ்.ஐ.மாரிமுத்து மற்றும் காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஊரடங்கு சமயத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 2,880,மதுபாட்டில்கள், 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 3 பேரை பிடித்து தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தாலுகா காவல் ஆய்வாளர் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து வாகனத்தையும், மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்