திருச்சியில் தமிழ்நாடு  சட்டப்பேரவை பொதுகணக்கு குழு கூட்டம் – மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு  சட்டப்பேரவை பொதுகணக்கு குழு கூட்டம் அந்த குழுவின் தலைவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன்  தலைமையில் திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான நட்ராஜ், டி.ஆர்.பி ராஜா, பழனிவேல் தியாகராஜன், உதயசூரியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். மாநகராட்சி, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பது குறித்தும், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி தேவைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, சத்திரம் பேருந்து நிலையம், அரசு கூர் நோக்கு இல்லம்வேளாண்மை கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் திட்டம்பணிகளை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

Translate »
error: Content is protected !!